சென்னைக்கு வருகிறது கிருஷ்ணா நீர்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகரில் நிலவி வரும் குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க மேலும் 2 டி.எம்.சி கிருஷ்ணா நீரை வழங்க ஆந்திரஅரசு ஒப்புக் கொண்டுள்ளது.

சென்னனக்கு ஆந்திராவின் கிருஷ்ணா நீர் வந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தில் மழை வேண்ய அளவு பெய்யாதகாரணத்தால் தமிழகத்திற்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரி, செம்பரப்பாக்கம் ஏரி, பூண்டி ஏரி ஆகியவற்றின்நீர்பிடிப்புப் பகுதிகள் வறண்டு போய் காணப்படுகின்றன.

15 ஆண்டுகளில் இது போல் வறட்சி ஏற்பட்டதில்லை என கூறும் விதத்தில் வறட்சி நிலவுகிறது. இந்த குடிநீர்பஞ்சத்தை தீர்க்க தமிழக அரசு ஆந்திர அரசிடம் மேலும் உதவி கேட்க தீர்மானித்தது.

இதையடுத்து தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் துரைமுருகனும் சென்னை மாநகர மேயர் மு.க.ஸ்டாலினும்ஆந்திராவுக்குச் சென்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்து தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர்தட்டுப்பாடு குறித்து விளக்கி,கிருஷ்ணா நதியிலிருந்து மேலும் நீர் திறந்து விடுமாறு கேட்டுக் கொண்டனர்.

இதற்கு சந்திரபாபு சம்மதம் தெரிவித்து தற்போது கொடுக்கப்பட்டு வரும் 4 டி.எம்.சி நீருடன் மேலும் 2 டி.எம்.சி. நீர்திறந்துவிட ஒப்புக் கொண்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+