போப் ஆண்டவர் புத்தாண்டு வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
ரோம்:
உலகம் முழுவதும் அமைதியும், சகோதரத்துவமும் பெருகட்டும் என்று போப் ஆண்டவர் தனது புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
புத்தாண்டையொட்டி போப் ஆண்டவரிடம் ஆசி பெறுவதற்காக ரோமில் உள்ள செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர்.
புத்தாண்டு பிறந்தபோது அவர், தன்னைக் காண வந்திருந்த மக்களிடையே பேசுகையில், கடந்த ஆண்டுகளில் மகிழ்ச்சியும், வெற்றியும், தோல்வியும்,துக்கமும் தொடர்ந்து வந்த வண்ணம் இருந்தன.
இனிவரும் புத்தாண்டுகளில் அடுத்தவர்களுக்காகக் கவலைப்படும், அடுத்தவர் நலனுக்காகப் பாடுபடும் புதிய உலகம் மலர வேண்டும் எனவாழ்த்துகிறேன். உலகம் முழுவதும் அமைதி ஏற்பட பிரார்த்திக்கிறேன் என்று போப் ஆண்டவர் பேசினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications