நேபாளத்தில் 2 வது நாளாக வேலைநிறுத்தம்
காட்மாண்டு:
நேபாளத்தில் 2 வது நாளாக செவ்வாய்க்கிழமையும் வேலை நிறுத்தம் தொடர்கிறது.
நடிகர் ரித்திக் க்ரோஷன் விவகாரம் தொடர்பாக, திங்கள்கிழமை 9 கம்யூனிஸ்ட் கட்சிகள் முழு அடைப்புப் போராட்டம் நடத்தின. இதனால்திங்கள்கிழமை முழுவதும் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. செவ்வாய்க்கிழமையும் முழு அடைப்பு தொடர்கிறது.
இதனால் வர்த்தக நிறுவனங்கள் மூடியே கிடந்தன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சாலைகள் பஸ், கார், ஆட்டோக்கள் எதுவும்ஓடாததால் பாலைவனம் போல் வெறிச்சோடிக் காட்சியளிக்கிறது. அரசு அலுவலகங்கள் திறந்துள்ளன. அரசு ஊழியர்கள் அனைவரும் நடந்தேஅலுவலகத்துக்குச் சென்றனர்.
இரண்டு நாட்கள் பொதுவேலைநிறுத்தம் குறித்து அரசு செய்தித் தொடர்பாளர் கூறுகையில், நேபாளத்தில் புத்தாண்டு தினத்தன்று வேலை நிறுத்தப் போராட்டம்நடந்தது. அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது என்றார்.
முன்னதாக இந்தி நடிகர் ரித்திக் க்ரோஷன் நேபாள நாட்டு மக்கள் புண்படும்படியான கருத்தை வெளியிட்டதாக செய்திகள் வெளியாயின. இதனால் அங்குகலவரம் ஏற்பட்டது. இந்தியர்களின் நிறுவனங்களில் தாக்குதல்கள் நடந்தன. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 5 பேர் கொல்லப்பட்டனர்.
இதை எதிர்த்து 9 கம்யூனிஸ்ட் கட்சிகள் சார்பில் இரண்டு நாட்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடந்து வருகிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகளின் வேலை நிறுத்தம் 2 வது நாளாக செவ்வாய்க்கிழமையும் தொடர்கிறது. நேபாள துணை பிரதமரும், உள்துறை அமைச்சருமானராம்சந்திராவை பதவி விலகுமாறு கம்யூனிஸ்ட் கட்சிகள் வற்புறுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications