தில்லுமுல்லு செய்த தலைமை ஆசிரியர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
போலிச் சான்றிதழ் கொடுத்து பதவி உயர்வு பெற முயன்ற தலைமை ஆசிரியர் உள்பட 5 பேரைப் போலீசார் கைதுசெய்தனர்.
வால்பாறை அருகே உள்ள காடம்பாறை பவர் ஹவுசைச் சேர்ந்தவர்கள் பழனிச்சாமி (36), அரிதாஸ், (30),ஆகியோர் மின்வாரிய ஊழியர்களாக பணியாற்றி வருகின்றனர். காடம்பாறையைச் சேர்ந்த பால்ராஜ் போஸ்ட்மாஸ்டராக பணியாற்றி வருகிறார். இதே ஊரில் அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி வருபவர்மருதமுத்து . இவர்கள் பதவி உயர்வுக்காக முயற்சி மேற்கொண்டனர்.
இதற்காகக் கல்வித் தகுதியை உயர்த்தி சான்றிதழ் தயாரித்தனர். இவர்களது நீண்டநாளைய கோரிக்கையை ஏற்றநிர்வாகம், விண்ணப்பத்தை பரிசீலனை செய்தது. இதில் அவை போலி எனக் கண்டறியப்பட்டது. இதையடுத்துபோலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப் பதிவு செய்து 5 பேரையும் கைது செய்து விசாரணை செய்துவருகின்றனர்.












Click it and Unblock the Notifications