முதல்வருக்கு கறுப்புக் கொடி காட்ட முடிவு
விழுப்புரம்:
திண்டிவனத்தில் புதிய மேம்பாலம் திறப்பு விழாவிற்கு வருகை தரும் முதல்வர் கருணாநிதிக்கு கறுப்பு கொடி காட்ட விவசாயிகள் சங்கம் திட்டமிட்டுள்ளது.
திண்டிவனத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பால திறப்பு விழா இந்த மாதம் 7-ம் தேதி நடக்கிறது. மேம்பால திறப்பு விழாவிற்காக முதல்வர்வருகிறார்.அப்போது அவருக்கு கறுப்புக் கொடி காட்ட விவசாயிகள் சங்கம் முடிவெத்துள்ளது.
இது பற்றி விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் சங்க செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறயிருப்பதாவது:
கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ 1,000 கொடுப்பதாக முதல்வர் கருணாநிதி அறிவித்திருந்தார். ஆனால் 10 சதவிகித ஜூஸ் தரும் கரும்புக்கு மட்டுமே ரூ 1,000தரமுடியும் என அறிவித்துள்ளார்.
8.5 சதவிகித ஜுஸ் தரும் கரும்புக்கும் ரூ 1,000 தர வேண்டும். சர்க்கரை ஆலைகளில் நிலுவையில் உள்ள தொகையை விரைவில் வழங்க உத்தரவிடவேண்டும் ஆகியவை உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வருக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டுவோம் என்றார்.