புத்தாண்டையொட்டி சிறைக் கைதிகளை விடுவிக்க ரஷ்ய முடிவு
மாஸ்கோ:
2001 ம் ஆண்டு பிறந்ததையொட்டி ரஷ்யா, சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரை விடுவிக்கத் திட்டமிட்டுள்ளது.
உலகிலேயே ரஷ்யாவில்தான் அதிக அளவு கைதிகள் இருக்கிறார்கள். இதை சர்வதேச மனித உரிமை கமிஷன் கண்டித்துள்ளது.
நீதித்துறை அமைச்சர் யோரி சைக்கா கூறுகையில், ரஷ்ய சிறைகளில் அடைக்கப்பட்டிருக்கும் கைதிகளை குறைக்கத் திட்டமிட்டுள்ளோம். இதனால்கைதிகளுக்குப் பொதுமன்னிப்பு வழங்கி அவர்களை விடுவிக்கத் திட்டமிட்டுள்ளோம். பொதுமன்னிப்பு வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினால் 3, 50,000கைதிகள் விடுவிக்கப்படுவார்கள்.
முதலில் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து மசோதா தாக்கல் செய்யப்பட்டு அதற்கு அனுமதி கிடைக்க வேண்டும். அதற்குப்பிறகுதான் கைதிகளைவிடுவிப்பது குறித்து ஆலோசனை செய்யப்படும்.
மேலும் குற்றவாளிகளுக்கு மனித நேய அடிப்படையில் தண்டனை அளிக்கவும், தண்டனையை குறைவுக்கவும் திட்டமிட்டுள்ளோம். பண்டிகை நாட்களில்ரஷ்யா, திருந்திய சிறைக்கைதிகளை விடுவிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளது.
1999 ம் ஆண்டு சிறு, சிறு குற்றங்கள் புரிந்த குற்றவாளிகளை விடுவித்தோம். இந்த வருடமும் சில கைதிகளை பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கத்திட்டமிட்டுள்ளோம் என்றார்.