சென்னை-நாகர்கோவிலுக்கு பொங்கல் ஸ்பெஷல் ரயில்
சென்னை:
பொங்கல் பண்டிகைையை முன்னிட்டு சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
சென்னை எழம்பூரிலிருந்து இந்த மாதம் 12-ம் தேதி முதல் நாகர்கோவிலுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் எழும்பூரிலிருந்து 12-ம்தேதி இரவு 10.45 மணிக்கு புறப்பட்டு 13-ம் தேதி பகல் 2 மணிக்கு நாகர்கோயில் சென்றடையும். நாகர்கோயிலிருந்து இம்மாதம் 16-ம் தேதிமாலை 5.30 மணிக்கு புறப்பட்டு 17-ம் தேதி காலை 9.30 மணிக்கு சென்னை வந்துசேரும்.
இந்த ரயில் தாம்பரம், விழுப்புரம், விருத்தாச்சலம், ஸ்ரீரங்கம், திருச்சி, கோயில்பட்டி, மணியாச்சி, திருநெல்வேலி வழியாக இரண்டு மார்க்கங்களிலும்செல்லும். இந்த ரயிலுக்கான முன்பதிவு செவ்வாய்கிழமை (02.01.2001) முதல் துவங்குகிறது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications