வேன் மரத்தின் மீது மோதியதில் 5 பேர் பலி
கோவை:
கோவை அருகே மரத்தில் மாருதி வேன் மோதியதில் 5 பேர் இறந்தனர்.
கோவையிலிருந்து கோயில்பாளையத்திற்கு புதன்கிழமை நள்ளிரவு பீளமேட்டைச் சேர்ந்த 5 வாலிபர்கள் மாருதிவேனில் வேகமாகச் சென்று கொண்டிருந்தனர். அவர்கள் குரும்பபாளையம் என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக ஒரு திருப்பததில் இருந்த புளியமரத்தில் வேன் மோதியது. இதில், வேனில் இருந்த 5பேர் இறந்தனர்.
பீளமேட்டைச் சேர்ந்த அரிதாஸ் (32), பயோனீர் மில் ரோட்டைச் சேர்ந்த தேவானந்தம் (24), விளாங்குறிச்சிரோடைச் சேர்ந்த தனஞ்செயன் (20), பிளேக் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ராமு (20), ஆகியோர்சம்பவ இடத்திலேயே இறந்தனர்.
பீளமேடு பட்டாள மாரியம்மன் கோயிலைச் சேர்ந்த மோகன்குமார் (22), விபத்தில் காயமடைந்து,மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இவர்கள் அனைவரும் கோயில்பாளையத்தில் உறவினர் ஒருவரைப் பார்க்க வேனில் சென்றனர். எதிரே வந்த ஒருவேனுக்கு வழி விட ஒரு திருப்பத்தில் ஒதுங்கிய போது இவர்கள் சென்ற மாருதி வேன் அருகில் இருந்தபுளியமரத்தில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டது எனக் கூறப்படுகிறது.
இந்த விபத்து தொடர்பாக கோவில்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications