தமிழகத்தில் இனி தி.மு.க. ஆட்சிதான்
திருவண்ணமலை:
மக்கள் செல்வாக்குடன் தமிழகத்தில் தி.மு.க.மீண்டும் ஆட்சியைப் பிடிக்கும் என்று அமைச்சர் கோ.சி.மணிபேசினார்.
திருவண்ணாமலையில் அவர் நிருபர்களிடம் பேசுகையில், நான் அதிக ஊர்கள், கிராமங்களுக்குச் சென்றுமக்களைச் சந்திப்பவன். 4 வது முறையாக தமிழகத்திற்கு முதல் அமைச்சராக வந்துள்ள கலைஞர் மீண்டும் 5 வதுமுறையாக அவரேதான் முதல் அமைச்சராக வருவார்.
மக்கள் செல்வாக்கு தி.மு.க.வுக்கும், முதல்வர் கருணாநிதிக்கும் அதிகமாக உள்ளது. இன்று பல திட்டங்களைவகுத்துள்ள அவர் மனதில் இன்னும் பல திட்டங்கள் உள்ளது.
தமிழகத்தில் கடந்த 96 ம் ஆண்டுக்கு முன் குடிநீர் வசதி, சாலை பராமரிப்பு போன்ற திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. தற்போது சிமென்டு சாலைகள், தெருக்கள் அமைக்கும் போது ஆதிதிராவிடர்கள் இருக்கும்பகுதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.
காரணம் அவர்கள் அதை முழுவதுமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அதுபோல் போக்குவரத்து வசதியும் இந்தஆட்சியில்தான் செய்யப்பட்டுள்ளது என்றார்.












Click it and Unblock the Notifications