மார்ச் 5 ம் தேதி ப்ளஸ் டூ தேர்வு ஆரம்பம்
சென்னை:
தமிழகத்தில் வரும் மார்ச் மாதம் 5 ம் தேதி ப்ளஸ் டூ பரிட்சையும், மார்ச் 27 ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி.பரிட்சையும்ஆரம்பிக்கப்படவிருக்கிறது.
இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:
2000- 2001 ம் ஆண்டு ப்ளஸ் டூ தேர்வுகள் மார்ச் 5 ம் தேதி தொடங்கி 28 ம் தேதி வரை நடக்கிறது. மூன்றரைலட்சம் ப்ளஸ் டூ மாணவ, மாணவியர் இந்த ஆண்டு தேர்வு எழுதுகின்றனர்.
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் ஓ.எஸ்.எல்.சி. தேர்வுகள் மார்ச் 27 ம் தேதி தொடங்கி ஏப்ரல் 6 ம் தேதி வரை நடைபெறும்.6 லட்சம் மாணவ, மாணவியர் இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி தேர்வு எழுதுகின்றனர். 1,500 மாணவ, மாணவியர்ஓ.எஸ்.எல்.சி. தேர்வு எழுதுகிறார்கள்.
மேற்கண்ட தேர்வுகள் குறித்து, பாடவாரியான கால அட்டவணை, முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும்மாவட்டக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்துப் பள்ளிகளுக்கும் விரைவில் தெரிவிக்கப்படும் என்றகூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications