அமெரிக்காவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
வாஷிங்டன்:
அமெரிக்காவில் 1970 ம் ஆண்டை விட தற்போது பிற நாட்டிலிருந்து வந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது என்றுகணக்கீடுகள் தெரிவிக்கின்றன.
அதாவது தற்போது அமெரிக்காவில் பிற நாடுகளிலிருந்து குடியேறியவர்களின் எண்ணிக்கை 28 மில்லியனான உயர்ந்துள்ளது.
அமெரிக்க குடியேற்றத்துறை அமைச்சகம் இது குறித்து ஆராய்ச்சி செய்து வெளியிட்டுள்ள அறிக்கை:
தற்போது பிற நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்து அமெரிக்காவில் குடியேறியவர்களின் எண்ணிக்கை 28.4 மில்லியனாக உள்ளது. இது அமெரிக்காவின்மொத்த மக்கள் தொகையில் 10.4 சதவீதமாகும். கடந்த 70 வருடங்களாக பிற நாடுகளிலிருந்து அமெரிக்காவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கைஅதிகரித்து வருகிறது.
அனுமதியில்லாமல் அதாவது போலி பாஸ்போர்ட்டுக்கள், விசாக்கள் மூலம் குடியேறியவர்களுக்கும் அவர்களது குழந்தைகளுக்கும் கல்வி, பிறசலுகைகள் சரி சமமாக வழங்கப்படுகின்றன. இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று அமெரிக்கர்கள் சிலர் 1994 ம் ஆண்டு போராட்டம்நடத்தினார்கள்.
மெக்சிகோ எல்லைப் பகுதி வழியே அமெரிக்காவில் குடியேறுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு வருடமும்ஆயிரக்கணக்கில் அனுமதியின்றி அமெரிக்காவில் பலர் குடியேறி வருகின்றனர். மெக்சிகோ எல்லைப் பகுதியில் பாதுகாப்புக்கள் போடப்பட்டிருந்தும்அதையும் மீறி நுழைந்து விட்டனர் வேறு நாட்டினர்.
இதே நிலை தொடர்ந்தால் அமெரிக்காவில் குடியேறியவர்களின் குழந்தைகள் வறுமை நிலையில் வாடும் அபாயம் ஏற்படும் நிலை உள்ளது. ஏனெனில்அமெரிக்காவில் உள்ளவர்களை விட அங்கு குடியேறுபவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் மிகக் குறைவாகவே உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.