கர்நாடகத்தில் வாஜ்பாய் 2 நாட்கள் சுற்றுப்பயணம்
பெங்களூர்:
பிரதமர் வாஜ்பாய் இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக 18 மற்றும் 19 ம் தேதிகளில் கர்நாடகம் வருகிறார்.
பிரதமர் வாஜ்பாய் ஜனவரி மாதம் கர்நாடக மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்யத் திட்டமிட்டுள்ளார். இதற்காக அவர் 18 ம் தேதி விமானம் மூலம்மங்களூர் வருகிறார்.
மங்களூரில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. வரவேற்பு நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு உடனடியாக அவர் உடுப்பிக்குச் செல்கிறார்.உடுப்பியில் நடக்கும் விழாவில் அவர் கலந்து கொள்கிறார்.
அடுத்த நாள் 19 ம் தேதி அவர் மங்களூரில் இருந்து பெங்களூர் வருகிறார். பெங்களூரில் கவர்னர் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
சாய்பாபா ஆசிரமம்:
பின்னர் ஒயிட்பீல்டில் சாய்பாபா ஆசிரமத்தில் புதிதாகக் கட்டப்பட்டு உள்ள மருத்துவமனையைத் திறந்து வைக்கிறார். பெங்களூரில் ஒரு கல்லூரிவிழாவிலும் கலந்து கொள்கிறார். பின்னர் 19 ம் தேதி பெங்களூரிலிருந்து டெல்லி திரும்புகிறார்.
யு.என்.ஐ.