For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அரசியல் குழப்பம்: நேபாளம் வர சுற்றுலா பயணிகள் தயக்கம்

By Staff
Google Oneindia Tamil News

காட்மாண்டு:

நேபாளில் பல வருடங்களாக நிலவி வரும் அரசியல் குழப்பம் காரணமாக அந்நாட்டிற்கு வரும் சுற்றுலாபயணிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

நேபாளில் பல காலமாக அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாமல் இருந்ததால் அங்கு வரும் சுற்றுலா பயணிகளின்எண்ணிக்கை குறைந்திருந்தது. சமீபத்தில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் காரணமாக சுற்றுலாப் பயணிகளின்எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. இது நாட்டின் பொருளாதாரத்தை பெருமளவு பாதித்துள்ளது.

சென்ற வாரம் பிரபல இந்தி நடிகர் ரித்திக் ரோஷன் நேபாள நாட்டையும் எனக்கு பிடிக்காது. நேபாள மக்களையும்எனக்கு பிடிக்காது என கூறியதாக புகார் எழுந்ததையடுத்து நேபாளத்தில் மாணவர்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து நேபாளின் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தேவ்பா தற்போதைய பிரதமர் கிரிஜா பிரசாத்கொய்ராலாவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர முடிவெடுத்துள்ளார்.

ஆனால் கொய்ராலா நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பொது ஓட்டெடுப்பு நடத்தப்படும் என அறிவித்தார். இதுஅரசியல் விதிகளுக்கு புறம்பானது என தேவ்பா குறை கூறியுள்ளார்.

இது போல் பொது வாக்கெடுப்பது சட்டப்படியும், அரசியில் விதிகளின்படியும் தவறானது. நம்பிக்கையில்லாவாக்கெடுப்பு நடத்தப்பட்டால் அதில் தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில்தான் இது போல் பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என கொய்ராலா கோரியுள்ளார் என தேவ்பா கூறியுள்ளார்.

123 அங்கத்தினர் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் தேவ்பா தனக்கு 56 எம்.பி.களின் ஆதரவு இருப்பதாககூறியிருந்தார். ஆனால் 4 எம்.பி.க்கள் அவருக்கு அளித்த வந்த ஆதரவை விலக்கிக் கொண்டு விட்டனர்.

இந்நிலையில் நேபாள அரசுக்கும், பொதுமக்களுக்கும் முக்கிய வருமானத்தை கொடுத்து வரும் சுற்றுலா துறைநலிவடைந்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம் அரசியல் ஸ்திரதன்மையின்மை தான்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X