பெங்களூர் டூ சென்னைக்கு சிறப்பு ரயில்
பெங்களூர்:
மேல்மருத்துவர் ஆதிபராசக்தி கோயிலில் நடக்கவிருக்கும் இருமுடி திருவிழாவிற்காக பெங்களூரிலிருந்துசென்னைக்கு சிறப்பு ரயில் 6-ம் தேதி இயக்கப்படுகிறது.
சென்னைக்கு அருகே இருக்கும் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயிலில் இருமுடி திருவிழா நடைபெறஇருக்கிறது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கென பெங்களூரிலிருந்து சென்னைக்குசிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளது.
இது பற்றி தெற்கு ரயில்வே வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
சிறப்பு ரயில் பெங்களூர் சிட்டி ரயில் நிலையத்திலிருந்து 6-ம் தேதி மாலை 6.55 மணிக்கு புறப்படுகிறது.ஜோலார்பேட்டை, அரக்கோணம், செங்கல்பட்டு வழியாக மேல்மருத்தூரை அதிகாலை 3 மணிக்கு சென்றடையும்.
மேல்மருத்தூரிலிருந்து ரயில் 7-ம் தேதி இரவு 7.15 மணிக்கு புறப்பட்டு 8- ம் தேதி அதிகாலை 4.30 மணிக்குபெங்களூர் வந்து சேர்கிறது என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications