பழனி அருகே அரசு பஸ்சில் முகமூடிக் கொள்ளை

Subscribe to Oneindia Tamil

பழநி:
பழநி அருகே அரசு பேருந்தை வழி மறித்து கொள்ளையடித்த மர்ம கும்பலை போலீசார் வலை வீசி தேடிவருகின்றனர்.

இந்த சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:

புதன்கிழமை இரவு அரசு பேருந்து திருப்பூரிலிருந்து பழநிக்கு வந்து கொண்டிருந்தது. இரவு 11.45 மணிக்குபழநிக்கு அருகே இருக்கும் மானூர்கோனே வாய்க்கால் என்ற இடத்தில் பேருந்து வந்து கொண்டிருந்த போதுமூகமூடி போட்ட இருவர் பேருந்தை வழி மறித்தனர். டிரைவர் பெரியசாமி பேருந்தை நிறுத்தினார்.

பேருந்துக்குள் ஏறிய அவர்கள் டிரைவரை அடித்து உதைத்தனர். இதனால் டிரைவர் படுகாயமடைந்தார்.இந்நிலையில் அருகே புதரில் மறைந்திருந்த கும்பல் ஒன்று பேருந்தின் மீது பெட்ரோல் குண்டை வீசியது. இதனால்பேருந்தில் தீப்பிடித்தது. பயணிகள் உயிருக்கு பயந்து ஓடத் துவங்கினர்.

நடத்துனர் பாலசுப்ரமணியத்தை தாக்கிய கும்பல் அவரிடமிருந்து சம்பள பணத்தையும், வசூல் பணத்தையும்கொள்ளையடித்துக் கொண்டு தப்பி ஓடி விட்டது. இந்த சம்பவம் காரணமாக அங்கு பதட்டம் நிலவி வருகிறது.கொள்ளையடித்த கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+