தமிழக அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்
சென்னை:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு அதிக பட்சமாக ரூ 2,500 போனாசாக வழங்கப்படும்என தமிழக அரசு அறிவித்துள்ளது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆண்டுதோறும் போனஸ் வழங்கப்பட்டுவருகிறது. இந்த ஆண்டும் போனஸ் வழங்கப்படுகிறது.
சி மற்றும் டி பிரிவு ஊழியர்கள், உள்ளாட்சி அமைப்புகளில் பணி புரிவோர், கல்வி நிறுவனங்களில் பணி புரியும்ஆசிரியர் உள்ளிட்ட எல்லோருக்கும் 30 நாள் ஊதியம் போனசாக வழங்கப்படும். அதிகபட்ச போனஸ் தொகை ரூ2,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கும், யு.ஜி.சி மற்றும் தொழில்நுட்ப கல்விக் கவுன்சிலின் கீழ் வருபவர்களுக்கும்அதிக பட்சமாக ரூ 825 போனசாக வழங்கப்படும்.
அரசு சார்பு நிறுவனங்களில் அயல் பணியில் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு அங்கு போனஸ் பெறாமல்இருந்தால் பொங்கல் போனஸ் வழங்கப்படும். இந்த பொங்கல் போனஸ் தொகை இந்த மாதம் 11-ம் தேதிவழங்கப்படும்.












Click it and Unblock the Notifications