திருப்பூர் ஆடை ஏற்றுமதி 8 சதவீதம் உயர்வு
கோவை:
திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி கடந்த ஆண்டை விட 8 சதவீதம் உயர்ந்துள்ளது என ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டுக் கழகம் வெளியிட்டுள்ளதகவலில் தெரிவித்துள்ளது.
திருப்பூர் நகரம் பின்னலாடை ஏற்றுமதியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 1999ம் ஆண்டில் டிசம்பர் மாதம் வரையில், 3.72 கோடி எண்ணிக்கை பின்னலாடைஏற்றுமதியானது. இந்த எண்ணிக்கையின் மதிப்பு 750 லட்சம் அமெரிக்க டாலராகும். இது 345 கோடி ரூபாய் ஆகும்.
இதே கால அளவில் 2000ம் ஆண்டில், 4.61 கோடி எண்ணிக்கை பின்னலாடை ஏற்றுமதியானது. இதன் மதிப்பு 900 லட்சம் டாலராகும். இந்தியமதிப்பில் ரூ. 414 கோடி ரூபாய் ஆகும். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 8 சதவீதம் உயர்வாகும்.
கடந்த ஓராண்டின் மொத்த ஆயத்த ஆடை ஏற்றுமதி 42.55 கோடி எண்ணிக்கையாகும். இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டைக் காட்டிலும், 12. 5 சதவீதம்உயர்வாகும். இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக 3.95 சதவீதமாகும்.
டெல்லியில் வரும் ஜனவரி 28ம் தேதி இந்திய சர்வதேச ஆயத்த ஆடைக் கண்காட்சி நடக்கிறது. இரண்டு நாட்கள் நடக்கும் இந்தக் கண்காட்சியில் உலகம்முழுவதிலும் இருந்து இறக்குமதியாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், திருப்பூரில் கடந்த முறை 10 ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்றன. இந்த ஆண்டு அதிக அளவில் ஏற்றுமதியாளர்கள் பங்கேற்பார்கள் எனஎதிர்பார்க்கப்படுகிறது என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.