For Daily Alerts
Just In
திருச்சியில் கள்ள நோட்டுக் கும்பல் கூண்டோடு கைது
திருச்சி:
திருச்சியில் கள்ள நோட்டுக்கள் தயாரித்தது தொடர்பாக 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
இதுகுறித்துப் போலீஸார் கூறுகையில், திருச்சியில் தனியார் ஹோட்டல் ஒன்றில் போலீஸார் திடீர் சோதனை நடத்திக் கொண்டிருந்த போது, அங்கு கள்ள நோட்டுவைத்திருந்த 3 பேரைப் போலீஸார் கைது செய்தனர்.
அவர்கள் நூறு ரூபாய் கள்ள நோட்டுக்களை வைத்திருந்தது தொடர்பாகக் கைது செய்தனர். கைது செய்யப்பட்டர்கள் பெயர்: ராஜா, நாகரத்தினம் மற்றும்குமார்.
இவர்களை விசாரணை செய்த போது இவர்கள், திருச்சியில் பல்வேறு இடங்களில் கள்ளநோட்டுக்கள் தயாரித்ததாகத் தெரிய வந்தது. இவர்களிடமிருந்து கள்ளநோட்டு தயாரிக்க உபயோகப்படுத்திய ரசாயனப் பொருட்கள், இயந்திரங்கள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் மேல் வழக்குப்பதிவுசெய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது என்றனர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Friday, January 5, 2001, 5:30 [IST]