For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சிறையில் விடுதலைப்புலி பிணம்

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் தலைநகர் கொழும்பிலிருந்து 40 கிலோமீட்டர் தொலைவிலுள்ள கல்தூவாரா பகுதியிலுள்ள சிறைஒன்றில் இறந்து கிடந்த விடுதலைப் புலியின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.

விசாரணையில் இறந்து கிடந்தவர் பெயர் சண்முகநாதன் நித்யானந்தம். திரிகோணமலையைச் சேர்ந்தவர். அவரதுஉடலில் பல காயங்கள் இருந்தன.

இதுகுறித்து சிறை அதிகாரிகள் கூறுகையில், சண்முகநாதன் விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர். இவர்கடந்த ஆகஸ்ட் மாதம் மன்னார் பகுதியில் வெடிகுண்டு வைத்துத் தகர்ப்பதற்காகத் திட்டமிட்டுக் கொண்டிருந்தபோது போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையே அவர் சிறையில் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டுஇறந்தாரா? அல்லது யாராவது அவரை கொலை செய்தனரா? என்பது குறித்து அவர்கள் விசாரணை நடத்திவருகிறார்கள்.

மேலும் சிறைக்குள் வைத்து, 3 கைதிகள் கொல்லப்பட்டது தொடர்பாக ஒரு சப் - இன்ஸ்பெக்டர், ஒரு ராணுவ வீரர்ஆகியோரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும் கோர்ட் வளாகத்தில் வைத்து வக்கீல் ஒருவர்கொல்லப்பட்டார். இதிலும் போலீஸாருக்குத் தொடர்பு இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனால், இலங்கையில் நடக்கும் பல்வேறு குற்றங்களுக்கும், போலீஸாருக்கும் தொடர்பு இருக்கும் என்றுபோலீஸார் பல்வேறு கோணங்களில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X