ஜாதிக் கட்சிகளுடன் கூட்டணி: மூப்பனார் அறிவிப்பு
சென்னை:
ஜாதிக் கட்சிகளுடன் த.மா.கா. கூட்டணி வைத்துக் கொள்ளும் என மூப்பனார் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பரதன் த.மா.கா. தலைவர் மூப்பனாரை அவரது வீட்டில்சந்தித்து பேசினார். மாநில செயலாளர் நல்லகண்ணு, அகில இந்திய செயலாளர் ராஜா ஆகியோரும் இந்தசந்திப்பில் கலந்து கொண்டனர்.
இந்த சநத்திப்பிற்கு பின் பரதன் நிருபர்களிடம் பேசுகையில் கூறியதாவது:
மூப்பனார் அவர்களிடம் அரசியல் நிலவரம் குறித்து பேசினோம். தேசிய அளவில் மூன்றாவது அணிதேவைப்படுகிறது. எங்கள் அணியில் தி.மு.க. சேராது என நினைக்கிறோம் என கூறினார்.
அதன் பின் நிருபர்களிடம் பேசிய முப்பனார் கூறியதாவது:
கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்தினேன். இந்த பேச்சு வார்த்தைதொடரும். ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியுமா முடியாதா என்பது குறித்து தேர்தல் கமிஷன்தான் முடிவுசெய்ய வேண்டும்.
ஜெயலலிதா போட்டியிட முடியாது என தேர்தல் கமிஷன் கூறியுள்ளதாக வைகோ கூறியிருக்கிறார். தேர்தல்ஆணையம் அவ்வாறு கூறியதாக தெரியவில்லை.
ஜாதிக் கட்சி என்பது என்ன? அதற்கு என்ன அளவு கோல்? ஜாதிக் கட்சிகளுடன் கூட்டணி அமைக்கக் கூடாதுஎன்றால் ஜாதியை பின்னணியாகக் கொண்ட எந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்கக் கூடாது. நாம் ஏற்கனவேஜாதி பின்னணி கொண்ட கட்சிகளை ஏற்றுக் கொண்டுள்ளோம் என கூறினார்.












Click it and Unblock the Notifications