2000 மாவது ஆண்டில் 24 பத்திரிக்கையாளர்கள் படுகொலை
நியுயார்க்:
2000 மாவது ஆண்டில் மட்டும் கொலம்பியா, சியோரா லியோன், ரஷ்யா ஆகிய நாடுகளில் 24 பத்திரிக்கையாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்றுதெரிய வந்துள்ளது.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைவுதான். கடந்த ஆண்டு உலகம் முழுவதும்கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை 34.
சியோரா லியோனில் 2000 மாவது ஆண்டில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர்களின் எண்ணிக்கை 3. ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த கர்ட் செஹார்க்,தனியார் தொலைக்காட்சி நிருபர் மோரா ஆகியோர் சியோரா லியோனில் நடந்து வரும் சண்டை குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற போதுகொல்லப்பட்டனர்.
பத்திரிக்கையாளர்கள் பெரும்பாலும் கொல்லப்படுவது போர் நடந்து கொண்டிருக்கும் நாடுகளில்தான். அதாவது பிற நாடுகளில் பத்திரிக்கையாளர்கள்முன்விரோதம் காரணமாகவோ அல்லது தாதாக்களைப் பகைத்துக் கொண்டதன் காரணமாகவோதான் கொல்லப்படுகிறார்கள்.
போர் நடந்து கொண்டிருக்கும் நாடுகளில் இரு தரப்பினருக்கிடையே துப்பாக்கிச் சண்டை நடந்து கொண்டிருக்கும் போது, அந்த சண்டை குறித்து செய்தியை சேகரிக்கச்செல்லும் நிருபர்கள் எதிர்பாராத விதமாகக் கொல்லப்பட்டு விடுகிறார்கள். இது தவிர்க்க முடியாத ஒன்று. மேலும் பல விஷயங்கள் குறித்தானரகசியத் தகவல்களை நிருபர்கள் வெளியிடுவதால் அவர்கள் எதிரிகளின் வேட்டைக்கு இரையாகி விடுகிறார்கள்.
ரஷ்யா மற்றும் கொலம்பியா நாடுகளிலும் இதே நிலைதான் தொடர்கிறது. பத்திரிக்கை நிருபர்கள் மட்டுமின்றி பத்திரிக்கை போட்டோ கிராபர்களும்கொலை செய்யப்பட்டு வருவது வாடிக்கையாகி வருகிறது.
சோமாலியா, பிலிப்பைன்ஸ், ஸ்ரீலங்கா, உக்ரைன் ஆகிய நாடுகளிலும் பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டு வருவது நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.இந்தியாவில் பிரதீப் பாட்டியா என்ற போட்டோகிராபர், பாகிஸ்தானில் சுபி முகமது கான் ஆகியோர் கொல்லப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications