தியாகராஜர் ஆராதனை விழாவில் சுஷ்மாசுவராஜ்
திருவையாறு:
திருவையாறில் நடக்கும் தியாகராஜர் ஆராதனை விழாவை மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தொடங்கிவைக்கிறார்.
தியாக பிரம்ம மகோத்சவ சபையின் செயலாளர் குன்னக்குடி வைத்தியநாதன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:
திருவையாறு தியாகராஜரின் 154 வது ஆராதனை பெருவிழா வருகிற 10 ம் தேதி தொடங்கி 15 ம் தேதி வரை 5நாட்கள் நடக்கிறது. 10 ம் தேதி மாலை 5 மணி முதல் 6 மணி வரையில் மங்கல இசை, வலங்கைமான் சவுந்தர்ராஜன்நாதசுர இசையுடன் விழா தொடங்குகிறது.
தொடக்க விழாவில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் மூப்பனார் கலந்து கொள்கிறார். மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் குத்து விளக்கேற்றி விழாவை தொடங்கி வைக்கிறார். ரூ 18 லட்சம் செலவில்கட்டப்பட்டுள்ள தியாகராஜர் விருந்தனர் மாளிகையை சபையின் தலைவர் மூப்பனார், மத்திய அமைச்சர் சுஷ்மாசுவராஜ் முன்னிலையில் கலெக்டர் ராஜாராம் திறந்து வைக்கிறார்.