ஜம்மு காஷ்மீரில் வன்முறை: 2000 ல் மட்டும் 2,659 பேர் பலி
ஸ்ரீநகர்:
2000 மாவது ஆண்டில் மட்டும் ஜம்மு காஷ்மீரில் நடந்த வன்முறையில் 2,659 பேர் கொல்லப்பட்டனர் என்றுஆய்வுகள் தெரிவிக்கின்றன.
கொல்லப்பட்டவர்களில் 1,520 பேர் தீவிரவாதிகள். இந்திய ராணுவ வீரர்கள் 397 பேர். மீதி பேர் பொதுமக்கள்.இதற்கிடையே ரம்ஜான் மாதத்தையொட்டி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் சண்டைநிறுத்தம் கடைபிடிக்கப்படும் என்றுபிரதமர் வாஜ்பாய் அறிவித்திருந்தார்.
மேலும் இந்த சண்டைநிறுத்தம் ஜனவரி 28 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சண்டைநிறுத்தத்தால் ஜம்முகாஷ்மீரில் நடக்கும் உயிர்ப்பலிகள் நடந்து வருகின்றன.
நவம்பர் மாதத்தில் 51 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இது சராசரியை விட மிகவும் குறைவானதாகும்.அக்டோபர் மாதத்தில் 163 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
அகில இந்திய ஹூரியத் அமைப்பினர் கூறுகையில், ஜம்மு காஷ்மீரில் நடந்து வரும் துப்பாக்கிச் சண்டையில் 1989லிருந்து 2000 மாவது ஆண்டு வரை 80,000 பேர் உயிரிழந்துள்ளனர் என்று கூறியுள்ளனர். மேலும் இதுவரை1,405 துப்பாக்கிகள், 59 ராக்கெட் ஏவுகணைகள், ஆர்.டி.எக்ஸ் வெடிமருந்துகள் 1,508 கிலோ ஆகியவைகைப்பற்றப்பட்டுள்ளன.
ஐ.ஏ.என்.எஸ்.