அனல் மின் நிலைய அதிகாரி கார் சிறைவைப்பு
மேட்டூர்:
மேட்டூர் அருகே அனல் மின் நிலைய தலைமைப் பொறியாளர் காரை பொதுமக்கள் சிறை வைத்தனர்.
மேட்டூர் அருகே புது சின்னக்காவூரில் 400 குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊருக்கு அருகே அனல் மின் நிலையத்திலிருந்து சாம்பல் நீரைத் தேக்கி வைக்கும் நீர்த்தேக்கம் ஒன்று உள்ளது. இந்த சாம்பல் நீர்த் தேக்கத்தில் கால்நடைகள் விழுந்து இறந்தன.
மேலும் இந்தப் பகுதியில் உள்ள இரண்டு கிராமங்களில் இந்த சாம்பல் நீரால் பாதிப்பு ஏற்பட்டது. சுமார் 266 மீட்டர் உயரள்ள இந்த நீர்த்தேக்கத்தை உயர்த்தக் கூடாது எனக் கூறி இவர்கள் போராட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இந்த ஏரியைப் பார்வையிட மேட்டூர் அனல்மின்நலைய தலைமைப் பொறியாளர் சிதம்பரம், அவருடன் பொறியாளர்கள் நடராஜன்., ஈஸ்வரமூர்த்தி, ஆகியோர் காரில் சென்றனர். அப்போது இவர்களை புது சின்னக்காவூர் மக்கள் வழிமறித்து ஒரு பள்ளியில் சிறை வைத்தனர்.
பின்னர் காரை மட்டும் வைத்துக் கொண்டு அவர்களை விடுவித்தனர். அவர்கள் நடந்து சென்று போலீசில் புகார் தெரிவித்தனர். போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications