புதிய தமிழகம் கட்சி அலுவலகம் மீது தாக்குதல்
சென்னை:
சென்னையில் புதிய தமிழகம் கட்சி அலுவலகம் வன்முறைக் கும்பலால் அடித்து நொறுக்கப்பட்டது.
முன்னதாக, மதுரைக்கு வந்த புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தாக்குதல் சம்பவம் குறித்து கேள்விப்பட்டதும் மீண்டும் சென்னைக்குத்திரும்பினார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:
புதிய தமிழகம் கட்சியில் இருந்த செல்வம் என்பவருக்கு கொலை வழக்கு ஒன்றில் தொடர்புடையது தெரிந்ததும் கட்சி தலைமை அவரை கட்சியிலிருந்துநீக்கியது. இதையடுத்து அவரது ஆட்கள், கட்சி அலுவலகத்தை தாக்கினர்.
கட்சியிலிருந்து நீக்கப்பட்ட செல்வத்தின் ஆதரவாளர்கள் 100 க்கும் மேற்பட்டோர் கட்சி அலுவலகத்தின்முன் கூடி கிருஷ்ணசாமியின் கொடும்பாவியைஎரித்தனர். கட்சி அலுவலகத்துக்குள் நுழைந்து தொலைக்காட்சிகள் மற்றும் நாற்காலி, மேஜைகளை அடித்து உடைத்தனர். இந்தத் தாக்குதலில் புதியதமிழகம் கட்சியைச் சேர்ந்த எட்வின், குணா, செல்லய்யா ஆகியோர் படுகாயமடைந்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications