மார்ச்சுக்குப் பின் ராமர் கோவில் கட்டப்படும்
தர்மஸ்தலம்:
விஸ்வ ஹிந்து பரிஷத்தின் தலைவர் அசேச் சிங்கால் அயோத்தியில் ராமர் கோயில் கட்டும் பணி மார்ச் மாதத்திற்குபின் துவங்கும் என கூறியுள்ளார்.
இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:
கோவில் கட்டுவது குறித்த முடிவு ஜனவரி மாதம் 21-ம் தேதி அலகாபாத்தில் நடக்கும் சாதுக்களின் கூட்டதின்போது எடுக்கப்படும்.
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது குறித்து மக்களின் எண்ணங்களுக்கு அரசியல்வாதிகள் மதிப்பு கொடுக்கவேண்டும். முஸ்லிம்களும் இந்துக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும்.
ராமர் கோவிலின் முதல் தளம் கட்டும் பணி வரும் மார்ச் மாதத்தில் முடிந்து விடும். 100-க்கும் அதிகமானசாதுக்கள், சன்னியாசிகள் மற்றும் பல மதத் தலைவர்களும் அவர்களது ஆதரவாளர்களும் கோயில் கட்டும்பணியில் ஈடுபட உள்ளனர். இதற்கு விஸ்வ இந்து பரிஷத்காரர்களை மட்டும் குற்றம் கூறுவது தவறு.
கோயில் கட்டும் புனித பணியை தடுப்பதை அனைத்து அரசியல்வாதிகளும் நிறுத்தி விடுவார்கள் என நம்புகிறேன்.கோயில் கட்டும் பணியை தடுக்க முற்பட்டால் அவர்கள் இந்துக்களுக்கு எதிரிகளாக பொதுமக்கள் முன்தோலுரித்துக் காட்டப்படுவார்கள் என கூறினார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications