வட இந்தியாவில் குளிருக்கு 40 பேர் பலி
டெல்லி:
வட இந்தியாவில் நிலவி வரும் கடும் குளிருக்கு 40-க்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர்.
வட இந்தியாவில் கடும் குளிர் நிலவி வருகிறது. கடந்த 4 நாட்களாக குளிர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்த கடும் குளிரின் காரணமாகஉத்திரபிரதேசம், குஜாராத், ராஜஸ்தான் மற்றும் டெல்லியில் இதுவரை 40-க்கும் அதிகமானவர்கள் இறந்துள்ளனர்.
டெல்லியில் கடும் பனி பல இடங்களில் இருப்பதால் சாலை போக்குவரத்து, ரயில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல விமானங்கள்ரத்து செய்யப்பட்டுவிட்டன. பல விமானங்கள் தாமதாக சென்று கொண்டும் வந்து கொண்டும் இருக்கின்றன.
வட இந்தியாவில் வாழும் ஏழைகளின் நிலைமை மிகவும் மோசமானது. கடும் குளிரை எதிர்த்து வாழ்வது மிகப் பெரிய போராட்டமாகும்.
இது குறித்து காவல் பணியில் பணிபுரிந்து வரும் ஒருவர் கூறுகையில், மாலை 5 மணிக்கு மேல் கடும் குளிர் வந்து விடுகிறது. இரவு 8 மணிக்கு மேலும் நான்வேலை செய்ய வேண்டியிருப்பதால் எனக்கு நெஞ்சு வலி வந்து நான் துன்பப்படுகிறேன் என கூறினார்.
உத்திரபிரதேச மாநிலத்தில் மட்டும் குளிருக்கு கடந்த 3 நாட்களில் 25 பேர் இறந்துள்ளனர். மின்சாரத் தடை நிலைமையை மோசமாக்கி வருகிறது.மின்தடை இருந்து வந்தாலும் ஹீட்டர்கள், கீசர்களை விற்கும் கடைக்காரர்களுக்க வியாபாரம் பிரமாதமாக நடந்து வருகிறது.
இந்த குளிர் மேலும் கடுமையாகும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்திருப்பது மக்களை மேலும் அச்சத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.












Click it and Unblock the Notifications