ரூ 20 லட்சம் மோசடி: தொழிலதிபர்கள் கைது
கோவை:
பங்குப் பணம் கொடுப்பதில் ரூ. 20 லட்ச ரூபாய் மோசடி செய்ததாக இரு தொழிலதிபர்களைப் போலீசார் கைதுசெய்தனர்.
கோவையில் பீளமேடு அருகே 3 பேர் கூட்டாக ஒரு தொழிற்சாலை நடத்தி வந்தனர். இதில், சுப்ரமணி என்பவர்மொய்தீன் (45), புட்டசாமி (30), ஆகியோருக்கு பங்கைப் பிரித்துக் கொடுக்க முடிவு செய்தார்.
எனவே, இருவருக்கும் தலா 10 லட்ச ரூபாய்க்கு செக் வழங்கினார். இந்த செக் பணமின்றி வங்கியிலிருந்து திரும்பிவந்தது. எனவே, குறித்து மொய்தீனும் புட்டச்சாமியும் போலீசில் புகார் செய்தனர். ஆனால், இந்தப் புகாரைப்போலீசார் ஏற்க மறுத்து விட்டனர்.
எனவே இருவரும் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்குத் தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட்,உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து, சுப்ரமணியம் மற்றும்அவரது மற்றொரு பங்குதாரர் ஆகியோரைப் போலீசார் கைது செய்தனர்.