சென்னையில் விஷ வாயு தாக்கி 3 பேர் பலி
சென்னை:
சென்னையில் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்யும் போது ஏற்பட்ட விஷ வாயுக் கசிவில் மூன்று பேர் உயிரிழந்தனர்.
உடனடியாக சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் சென்று மூன்று பேரின் சடலங்களையும் மிகுந்த சிரமத்திற்குப் பிறகு மீட்டனர்.
சென்னையை அடுத்துள்ள நெசப்பாக்கம் பகுதியில் உள்ள கழிவு நீர் தொட்டியை சனிக்கிழமை 20 மற்றும் 22 மதிக்கத்தக்க இரண்டு வேலையாட்கள்சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென்று தொட்டியிலிருந்து விஷ வாயு கசிய ஆரம்பித்தது. இந்த விஷ வாயு தாக்கி இரண்டு பேரும் இறந்தனர். அவர்கள் சுத்தம் செய்வதைமேற்பார்வையிட்டுக் கொண்டிருந்த பொதுப்பணித்துறை என்ஜினியர் ஒருவரும் விஷ வாயு தாக்கி பலியானார்.
கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்து கொண்டிருந்த போது, முதலில் ஒருவர் மேல் விஷ வாயு தாக்கியது. அவர் சம்பவ இடத்திலேயே பலியானார். இதைப்பார்த்துக் கொண்டிருந்த இன்னொருவரும், என்ஜினியரும் அடுத்தடுத்து விஷ வாயு தாக்கி இறந்தார்.
தீயணைப் படையினர் கழிவுநீர்த்தொட்டிக்கு வந்து இறந்த மூன்று பேரின் உடல்களையும் மீட்டு அவர்களது உடல்களை உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications