வங்கியில் தில்லுமுல்லு செய்த இருவர் கூட்டணி

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் ரூ. 350 ரூபாய் டிமான்ட் டிராப்ட்டை 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயாக மாற்றி, கெமிக்கல் லோடுஎடுத்துச் சென்ற இருவரைப் போலீசார் கைது செய்தனர்.

கோவை செல்வபுரம் முத்துசாமி காலனியைச் சேர்ந்தவர் காமராஜ். இவர் மொத்தமாக கெமிக்கல்ஸ் மற்றும் சாயப்பொருட்களை விலைக்கு வாங்கி சில்லறையில விற்பனை செய்து வந்தார். இவரது நண்பர் வெங்கடாச்சலம்.இவரும் உதவி வந்தார். இந்நிலையில் இருவரும் பெரிய அளவில் வியாபாரம் செய்ய வேண்டும் என எண்ணினர்.எனவே அதற்கான கொள்தல் தொகையை திரட்ட முடிவு செய்தனர். ஆனால், யாரும் இவர்களுக்கு உதவவில்லை.

எனவே, இருவரும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்திற்குச் சென்றனர். அங்குள்ள ஒரு வங்கயில் ரூ. 350 ரூபாய்க்குஒரு டிமான்ட் டிராப்ட் எடுத்தனர். அதனை எடுத்துக் கொண்டு கோவை வந்தனர். ரூ.350 ரூபாயை 3 லட்சத்து 50ஆயிரம் ரூபாயாக திருத்தினர்.

பின்னர் கோவையில் கணபதி என்ற இடத்தில் இருந்த சாயப் பொருட்கள் மொத்த வியாபார நிறுவனத்திற்குவந்தனர். அங்கு 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயக்கான டி.டி யைக் கொடுத்து விட்டு ஒரு லாரியில் 90 ஆயிரம்ரூபாய்க்கான பொருட்களை ஏற்றிச் சென்றனர்.

இதன் பின்னர் டி.டியை மொத்த வியாபாரம் செய்து வரும் உரிமையாளர் வங்கியில் செலுத்தினார். அப்போதுவங்கியில் இருந்த அலுவலர் இதனை சரி பார்த்தார். அப்போது அதில், வங்கி பெரிய தொகைக்கு வங்கியின்கேஷியர் மட்டும் கையெழுத்திட்டுருந்ததைக் கண்டு பிடித்தனர்.

இது குறித்து உடனடியாக வியாபர நிறுவனத்திற்கு தகவல் கொடுத்தனர். அவர் டி.டியைப் பெற்று போலீசில் புகார்தெரிவித்தார். போலீசார் வழக்குப் பதிவு செய்து காமராஜ் மற்றும் வெங்கடாச்சலத்தை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+