தடா கைதிகள் வழக்கு விசாரணை ஆரம்பம்
மைசூர்:
மைசூர் சிறையில் இருக்கும் தடா கைதிகளின் வழக்கு விசாரணை துவங்கியது. இந்த வழக்கு விசாரணையை விரைந்து முடிக்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.
கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தலின் போது வீரப்பன் விடுத்த முக்கிய கோரிக்கைகளில் மைசூர் சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்க வேண்டும்என்பதாகும். இந்த சிறையில் எவ்வித விசாரணையும் இல்லாமல் 151 பேர் தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர்.
இவர்களை வீரப்பன் விடுவிக்க கோரிக்கை விடுத்தபோது, கர்நாடக அரசு இந்தக் கோரிக்கையை பரிசீலனை செய்தது. ஆனால், இவர்களை விடுவிக்கஉச்சநீதிமன்றம் அனுமதி மறுத்தது. மேலும் இந்த வழக்கை விரைந்து முடிக்க கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து தற்போது உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி இந்த வழக்கை விரைந்து முடிக்க நீதிபதி கிருஷ்ணப்பா என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும்வழக்கு விசாரணை சனிக்கிழமை துவங்கியது.
இதில் ஜாமீனில் உள்ள 70 பேர் மற்றும் சிறையில் இருக்கும் 51 கைதிகள் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டனர். விசாரணை மீண்டும் ஜனவரி 8ம்தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications