For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

70 சென்னை மீனவர்கள் விடுவிப்பு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆந்திராவில் 5 நாட்களாக சிறை வைக்கப்பட்டிருந்த சென்னை மீனவர்கள் 70 பேரும் சனிக்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.

சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலிருந்து 70 மீனவர்கள் ஆந்திராவிற்கு புது வருடத்தின் போது மீன் பிடிக்கச் சென்றனர். அவர்களை ஆந்திராவின்திங்காபள்ளி மீனவர்கள் சிறை பிடித்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சென்னை விசைப்படகு உரிமையாளர்கள் திங்காபள்ளி மீனவர்கள் 7 பேரை சென்னைக்கு கடத்தி வந்தனர். இவர்களைவிடுவிக்காவிட்டால் கடும் விளைவுகள் ஏற்படும். இவர்களை விடுவித்த பின் பேச்சு வார்த்தை நடத்தி பிரச்சனையை தீர்த்துக் கொள்ளலாம் என ஆந்திரமீனவர்கள் கூறியதைத் தொடர்ந்து ஆந்திர மீனவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

அதையடுத்து இரு மாநில மீனவர்களுக்குமிடையே பேச்சு வார்த்தை நடந்தது. எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தற்காக ரூ 7,500 அபராதம் செலுத்த வேண்டும்என முடிவு செய்யப்பட்டதன்படி சென்னை மீனவர்கள் ரூ 60,000 அபராதம் செலுத்திய பின் விடுதலை செய்யப்பட்டனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X