For Daily Alerts
Just In
மீண்டும் ஒடும் இந்தியா - பாக். ரயில்
இஸ்லாமாபாத்:
சம்ஜ்ஹாதா விரைவு ரயில் போக்குவரத்து ஒப்பந்தத்தில் மீண்டும் கையெழுத்திடுவது குறித்து இந்திய- பாகிஸ்தான் அதிகாரிகள் விவாதிக்க உள்ளன
ர்.இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையேயான விரைவு ரயில் போக்குவரத்து இருந்து வந்தது. இதற்கான ஒப்பந்தம் முடிவடைந்து விட்டது.ஆனாலும் இரண்டு நாட்டு அதிகாரிகளும் ஒப்புக் கொண்டதால் ரயில் போக்குவரத்து மேலும் இரண்டு மாதத்திற்கு நீடிக்கப்பட்டது.
இந்நிலையில் ரயில் போக்குவரத்திற்கான ஒப்ந்தத்தில் மீண்டும் கையெழுத்திடுவது குறித்து பேச்சு வார்த்தை நடத்த இந்திய - பாகிஸ்தான் அதிகாரிகள்இந்த மாதம்16-ம் தேதி சந்திக்கின்றனர்
இது தவிர ரயில் கட்டணத்தை அதிகரிப்பது குறித்தும், இதுவரை வசூலாகாத மீதத் தொகைகள் குறித்தும் இரு நாட்டு அதிகாரிகளும் விவாதிப்பார்கள் எனகூறப்படுகிறது.
யு.என்.ஐ.
Comments
Story first published: Tuesday, January 9, 2001, 5:30 [IST]