தென்னக ரயில்வே அலுவலகத்தில் வெடிகுண்டு புரளி
சென்னை:
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள தென்னக ரயில்வே அலுவலக வளாகத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக தொலைபேசி மூலம் மிரட்டல்வந்தது.
ஆனால் அது வதந்தி என்று சிறிது நேரத்தில் தெரிய வந்தது. இதுகுறித்து ரயில்வே போலீஸார் கூறுகையில், அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர்,தென்னக ரயில்வே நிலையத்திற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்.
அவர் பாதுகாப்பு ஊழியர் ஒருவரிடம் தொலைபேசி மூலம் பேசுகையில், தென்னக ரயில்வே கட்டிடத்தின் முன் உள்ள வளாகத்தில் வெடிகுண்டுவைக்கப்பட்டுள்ளது. அது எந்த நிமிடமும் வெடிக்கலாம் என்று கூறியிருக்கிறார். உடனடியாக இதுகுறித்துப் போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து போலீஸார் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்திய போது வெடிகுண்டு எதுவும் வைக்கப்படவில்லைஎன்றும் அது வெறும் புரளியே என்றும் தெரிய வந்தது என்றனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications