ப்ரவுன் சுகர் பறிமுதல்..இருவர் கைது
நாகர்கோவில்:
கன்னியாக்குமரி மற்றும் திருநெல்வேலியில் சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரூ 34 கோடி பெறுமானமுள்ள 34 கிலோ ப்ரவுன் சுகர் பறிமுதல்செய்யப்பட்டது.
ப்ரவுன் சுகர் வைத்திருந்தது தொடர்பாக இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து தூத்துக்குடி சுங்கத்துறை மற்றும் போதைப்பொருட்கள் தடுப்புப் பிரிவு துணை கமிஷனர் கோமதி நாயகம் நிருபர்களிடம் கூறுகையில், ப்ரவுன் சுகர்கடத்த முயன்ற இரண்டு பேரைக் கைது செய்துள்ளோம். அவர்கள் பெயர் கதிரேசன் (52), சுந்தர் (30).
இவர்கள் இருவரும் கன்னியாக்குமரியில் ஹோட்டல் ஒன்றில் ப்ரவுன் சுகர் பாக்கெட்டுக்களுடன் தங்கியிருந்தனர். அவர்களிடமிருந்த 24 கிலோ ப்ரவுன் சுகர்கைப்பற்றப்பட்டது.
அவர்களை விசாரித்த போது திருநெல்வேலியில் உள்ள கொட்டாப்புளி கடற்கரைப் பகுதியிலும் ப்ரவுன் சுகரை மறைத்து வைத்திருப்பது தெரிய வந்தது. அங்குஉடனடியாகப் போலீஸார் சென்று 10 கிலோ ப்ரவுன் சுகரைக் கைப்பற்றினர். மொத்தம் கைப்பற்றப்பட்ட ப்ரவுன் சுகரின் மதிப்பு ரூ 34 கோடியாகும்என்றார்.
யு.என்.ஐ.