தமிழகத்திற்கு மே மாதம் தேர்தல் .. ஆணையம் முடிவு
டெல்லி:
அசாம், கேரளா, தமிழ்நாடு, மேற்கு வங்கம் ஆகிய நான்கு மாநிலங்களிலும், பாண்டிச்சேரியிலும் மே மாதம் 3-வதுவாரத்திற்குள் தேர்தல்களை நடத்தி முடிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
அசாம், கேரளா, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காள சட்டசபையின் காலம் ஜூன் மாதம் 11-ம் தேதிமுடிவடைகிறது.
இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ் கில் நிருபர்களிடம் கூறியதாவது:
நான்கு மாநிலங்களிலும் ஒரே சமயத்தில் தேர்தல் நடத்த முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது. ஒரே நாளில்தேர்தலை நடத்தினால் தான் ஒரு மாநிலத்தின் முடிவு மற்றொரு மாநிலத்தை பாதிக்காமல் இருக்கும்.
தேர்தல் நடக்கும் சமயத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக பராமரிக்கப்பட வேண்டும் என தேர்தல் கமிஷன்விரும்புகிறது. அப்போதுதான் மக்கள் வாக்குரிமையை செலுத்த முடியும்.
மேற்கு வங்கத்தில் நடந்து வரும் வன்முறையை குறைப்பது குறித்து நாங்கள் எதுவும் செய்ய முடியாது.
தேர்தல் அதிகாரி கிருஷ்ணமூர்த்தி வியாழக்கிழமை மேற்கு வங்கம் செல்கிறார். அவர் தேர்தல் நடத்துவது குறித்தஏற்பாடுகளை பார்வையிடுவார் என்றார் கில்.
யு.என்.ஐ.