கொழும்பில் நார்வே தூதுக்குழுத் தலைவர்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கை இனப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் விதத்தில் அதிபர் சந்திரிகா குமாரதுங்காவையும், விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனையும் சந்தித்துப்பேசுவதற்காக நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் புதன்கிழமை கொழும்பு வந்துள்ளார்.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு அதிபர் சந்திரிகா கூறுகையில், அமைதிப் பேச்சுவார்த்தை தொடங்குவதற்கு முன்பு சண்டைநிறுத்தம் என்ற பேச்சுக்கேஇடமில்லை என்று கூறினார்.

மேலும் கிறிஸ்துமஸ் தினத்தன்று புலிகள் அறிவித்திருந்த சண்டைநிறுத்தத்தையும் ஏற்க மறுத்து விட்டார் சந்திரிகா. இதையடுத்து நார்வே தூதுக்குழுத் தலைவர்எரிக் சோல்ஹெம் இரு தரப்பினரையும் சந்தித்துப் பேசுவதற்காக இலங்கை வந்துள்ளார்.

உலக நாடுகளின் வற்புறுத்தலின் பேரில் இலங்கை இனப்பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் செயல்பட்டு வருகிறது நார்வே தூதுக்குழு. நார்வேதூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம் இலங்கையில் அரசுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையைத் தொடங்க ஏற்பாடுசெய்து பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண முயற்சிப்பார் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

கொழும்பு வந்த நார்வே தூதுக்குழுத் தலைவர் எரிக் சோல்ஹெம்மை இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகள் வரவேற்றன.

முன்னதாக, செவ்வாய்க்கிழமை மாலை அதிபர் சந்திரிகா கூறுகையில், விடுதலைப் புலிகள் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ஒப்புக் கொண்டால் நாங்கள் சண்டைநிறுத்தம் செய்யத் தயாராக இருக்கிறோம்.

வெறும் சண்டைநிறுத்தம் செய்வதால் மட்டும் பிரச்சனை தீர்ந்து விடாது. அமைதிப் பேச்சுவார்த்தை மூலம் நிரந்தரத் தீர்வு காண புலிகள் ஒத்துழைப்புகொடுக்க வேண்டும் என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+