மிசா. பாண்டியனைத் தேடி கம்பத்தில் சோதனை
கம்பம்:
மதுரை நிதி நிறுவன அதிபர் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டுள்ள மதுரை துணைமேயர் மிசா பாண்டியனை தேடும் முயற்சியாக கம்பம் பகுதியில் உள்ள தி.மு.க.பிரமுகர்கள் பலர் வீடுகளில் ரெய்டு நடத்தப்பட்டது.
மதுரையில் தனியார் நிதி நிறுவனம் நடத்தி வந்த ஜெகதீசன் என்பவரை கொலைசெய்தது தொடர்பாக மதுரை துணை மேயர் மிசா பாண்டியன் போலீசாரால் தீவிரமாகதேடப்பட்டு வருகிறார்.
அவரை தேடி கே.கே.பட்டி, கடலூர், கம்பம் உட்பட பல பகுதிகளில் உள்ள தி.மு.க.பிரமுகர்கள் பலரது வீடுகள் மற்றும் தோட்டங்களில் போலீசாரால் ரெய்டுநடத்தப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் போலீஸ் அதிகாரி ஒருவரது காரில் மதுரை துணை மேயர்பாண்டியன் மேலும் சிலரும் கம்பம் நோக்கி வருவதாக தேனி மாவட்ட போலீசாருக்குதகவல் கிடைத்தது.
இந்த தகவலின் பேரில் அந்த காரை வழிமறித்து பிடிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.அந்த கார் லோயர்கேம்ப் பகுதியில் வந்து போது போலீஸ் ஜீப்பை கண்டதும் வேறுபக்கம் திரும்பியது. அங்கும் போலீஸ் இருப்பதைக் கண்டதும் அந்த கார் வேறொருபாதையில் திரும்பி அதிவேகமாக சென்றது. போலீசார் விடமால் அந்த காரை துரத்திச்சென்றனர்.
ஆனால் குருவனத்துப்பாலம் தம்மணம்பட்டி அருகே அந்த கார் நின்றுகொண்டிருந்தது. ஆனால் அந்த காரில் யாரும். இல்லை. அதில் பயணம் செய்தவர்கள்அருகில் இருக்கும் மலைப்பகுதி வழியாக கேரளாவிற்கு தப்பி சென்றிருக்கலாம்எனவும், தப்பியவர்களில் பாண்டியனும் இருப்பார் எனவும் போலீஸ் தரப்பில்சந்தேகம் இருக்கிறது.












Click it and Unblock the Notifications