கருணாநிதியுடன் ராம்தாஸ் திடீர் சந்திப்பு
சென்னை:
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் டாக்டர் ராமதாஸ், முதல்வரும், தி.மு.கதலைவருமான கருணாநிதியை சந்தித்து பேசினார்.
பா.ம.க. தலைவர் ராமதாஸ், முதல்வரை அவரது கோபாலபுரம் இல்லத்தில் சந்தித்து 20நிமிடம் பேச்சு வார்த்தை நடத்தினார். பேச்சு வார்த்தையை துவங்கும் முன் ராமதாஸ்முதல்ருக்கு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் தி.மு.க., பா.ம.க. இரண்டுமே அங்கம் வகிக்கின்றன.ஆனாலும் தி.மு.க. வை சமீப காலமாக ராமதாஸ் கடுமையாக தாக்கி வந்தார். இந்நிலையில் இரு தலைவர்களும் சந்தித்து பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாககருதப்படுகிறது.
இரு நாட்களுக்கு முன்பு கூட தமிழக ராஜீவ் காங்கிரஸ் இருக்கும் கூட்டணியில்பா.ம.க. இருக்காது என அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
ராமதாஸ் இது போல் கூறியது அவர் தி.மு.க.கூட்டணியிலிருந்து விலகி அ.தி.மு.க.கூட்டணிக்கு போய் விடக் கூடும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்தனர்.
இந்நிலையில் ராமதாஸ் முதல்வரை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது பலரையும்வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. பா.ம.க. தலைவரும், முதல்வரும் வரவிருக்கும்சட்டசபை தேர்தல் கூட்டணி பற்றியும். செயல்பாடுகள் பற்றியும் பேசினார் எனகூறப்படுகிறது. ஆனாலும் இரு தலைவர்களும் என்ன பேசினார்கள் என்பது குறித்தவிவரங்கள் தெரியவில்லை.
யு.என்.ஐ.