ஜன. 24 ல் மக்கள் தமிழ் தேசத்தின் பொதுக்குழு கூடுகிறது
சென்னை:
வரும் ஜனவரி 24 ம் தேதி மக்கள் தேசம் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூடி கட்சியின் கொள்கைகள் மற்றும்சட்டசபைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்று கட்சித் தலைவரும், முன்னாள் அமைச்சருமான கண்ணப்பன்தெரிவித்தார்.
இதுகுறித்து சென்னையில் அவர் வியாழக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது:
மக்கள் தமிழ் தேசம் கட்சி தற்போது யாருடனும் கூட்டணி வைத்துக் கொள்ளவில்லை. தேர்தல் கூட்டணி வைத்துக்கொண்டால் கண்டிப்பாக ஆட்சியில் பங்கு கேட்கும்.
தேசிய ஜனநாயகக் கூட்டணியும், அ.தி.மு.க.வும் தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் தனி ஆட்சியேஅமையும் என்று கூறி வருகிறார்கள். இது தவறான கணிப்பு. தமிழகத்தில் கண்டிப்பாக கூட்டணி ஆட்சியேஅமையும். தமிழகத்தில் 3 வது அணி அமையும் வாய்ப்பும் இல்லை.
பிப்ரவரி மாதம் முதல் தேர்தல் பிரச்சாரம் நடத்தத் திட்டமிட்டுள்ளோம். 184 தொகுதிகளில் முதல் கட்டமாகபிரச்சாரம் செய்யத் திட்டமிட்டுள்ளோம்.
முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டத்தை 144 அடியாக உயர்த்த வேண்டும். அப்போது தான் தமிழகத்தின்தென் பகுதிகளில் விவசாயத்திற்கு இது உதவிகரமாக இருக்கும். முல்லைப்பெரியாறு அணை விவகாரத்தில் கேரளஅரசு மத்திய அரசு நியமித்த நிபுணர்கள் குழுவின் ஆலோசனையை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றார்கண்ணப்பன்.
யு.என்.ஐ.