For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

மேற்கு வங்க பிரச்சனையில் காங்.இரட்டை வேடம் ... பாஜக

By Staff
Google Oneindia Tamil News

அகமதாபாத்:

மேற்கு வங்காள பிரச்சனையில் காங்கிரஸ் இரட்டை வேடம் போடுகிறது என்று அகில இந்திய பாரதிய ஜனதாக் கட்சித் தலைவர் பங்காரு லட்சுமண்குற்றம்சாட்டியுள்ளார்.

டெல்லியில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்த வேண்டும் என்று காங்கிரஸார் கூறுகிறார்கள். சிலசமயம் இதற்கு எதிர்மறையான கருத்துக்களைக் கூறி வருகிறார்கள். அதாவது அவர்கள் இரட்டை வேடம் போடுகிறார்கள் என்றே கூறலாம்.

கடந்த ஒரு வருடமாக மேற்கு வங்காளத்தில் வன்முறை நடந்து வருகிறது. கடந்த ஒரு வருடம் மட்டும் சி.பி. ஐ.(எம்) தொண்டர்கள் தாக்குதல் நடத்தியதில்350 க்கும் மேறபட்டோர் கொல்லப்பட்டனர். கொல்லப்பட்டவர்கள் அனைவரும் பாரதிய ஜனதா கட்சி மற்றும் திரிணாமூல் காங்கிரஸ்தொண்டர்கள்.

வன்முறை தலைவிரித்தாடுவதைத் தடுக்க வேண்டுமானால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும். தற்போது தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும்வன்முறைச் சம்பவங்களால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு மக்களிடையே செல்வாக்கு குறையும் என்பதில் சந்தேகம் இல்லை என்றார் பங்காருலட்சுமண்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X