Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஸ்பைட் மீது தேச துரோக வழக்கு ... விசாரணை ஒத்திவைப்பு

Subscribe to Oneindia Tamil

சுவா:

பிஜியில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள கலகக்கும்பல் தலைவர் ஜார்ஜ் ஸ்பைட் மற்றும் அவரதுஆதரவாளர்கள் மீது தொடரப்பட்டுள்ள தேசதுரோக வழக்கு விசாரணை வரும் ஜனவரி 24 க்குஒத்திவைக்கப்பட்டுள்ளது

ஜார்ஜ் ஸ்பைட் மீது தொடரப்பட்ட வழக்கு வியாழக்கிழமை நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் சேலாசி முன்னிலையில்விசாரணைக்கு வந்தது. இவ்வழக்கில் 114 பேரிடம் சாட்சியங்கள் வாங்கப்பட வேண்டும். ஆனால் சாட்சிகூறுபவர்கள் அனைவரும் விசாரிக்கப்படாததால் வழக்கு விசாரணைக்கு இன்னும் கால அவகாசம் தேவைப்படும்.

இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்த போது, வழக்கை விசாரித்த லேசியா தனது தீர்ப்பில்,இவ்வழக்கில் சாட்சியங்கள் இன்னும் விசாரணை செய்து முடிக்கப்படாததால் இவ்வழக்கு வரும் ஜனவரி மாதம் 24ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.

முன்னதாக, கடந்த மே மாதம் 19 ம் தேதி பிஜியில் பிரதமர் மகேந்திர செளத்ரியை கலகக்கும்பல் தலைவர் ஜார்ஜ்ஸ்பைட் தலைமையிலான கலகக்கும்பல் சிறை வைத்தது. பிஜியில் பூர்வ குடிமக்கள் தான் பிரதமராக இருக்கவேண்டும். வேறு நாட்டவர் பிஜி தீவு பிரதமராக இருக்கக் கூடாது என்று போராட்டம் நடத்தியது.

இதையடுத்து ராணுவ வீரர்களுக்கும், கலகக்கும்பலுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்தது. இதையடுத்துபிஜியில் சிறைவைக்கப்பட்டிருந்த மகேந்திர சவுத்ரி விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து ஜார்ஜ் ஸ்பைட் கைதுசெய்யப்பட்டார். அவரது கூட்டாளிகள் சிலரும் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட அனைவர் மீதும் தேசதுரோக வழக்கு தொடரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.ஏ.என்.எஸ்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+