பாக். ஆதரவு தீவிரவாதிகள் கைது
ஸ்ரீநகர்:
குடியரசு தின விழாவில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டிய பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் 4 பேர் போலீஸாரால் கைது செய்தனர்.
பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் காஷ்மீரிலும், இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் சதிவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் லஸ்கர் ஈதொய்பா இயக்கத்தைச் சேர்ந்த 2 தீவிரவாதிகள் டெல்லி செங்கோட்டையில் தாக்குதல் நடத்தினர். இதில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார்.இன்னொரு தீவிரவாதியை போலீஸார் கைது செய்தனர்.
இதற்கிடையே காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகர், மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆகிய இடங்களில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகப் போலீஸாருக்குத்தகவல்கள் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
இதற்கிடையே போலீஸார் ஸ்ரீநகரில் போலீஸார் கடும் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜமாத்துல் முஜாஹிதின்அமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் முசாபர், குர்ஷித் அகமது, மாவட்ட கமாண்டர் சுல்தான் இஸ்லாகி, அப்துல் அஜிஸ்பிர் ஆகிய 4 பேர் கைதுசெய்யப்பட்டனர்.
இவர்களிடம் நடத்திய விசாரணையில், காஷ்மீரில் குடியரசு தின விழாவில் குண்டு வைக்க சதித்திட்டம் தீட்டியிருப்பது தெரிய வந்தது. மேலும் குடியரசு தினவிழாவின் போது முக்கிய அரசியல் தலைவர்களை தீர்த்துக்கட்டத் திட்டமிட்டிருப்பதும் தெரிய வந்தது.