For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

நெசவாளர்கள் முற்றுகையில் தாமரைக்கனி

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி அலுவலகத்தில் அ.தி.மு.க.எம்.எல்.ஏ. தாமரைக்கனியை நெசவாளர்கள் சுற்றி வளைத்து முற்றுகைப் போராட்டம் நடத்தினர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் 1988 ம் ஆண்டு நெசவாளர்கள் கூட்டுறவு சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதாவது தறியில்லாத நெசவாளர்களுக்கு வேலை வாய்ப்பளிக்கும்வகையில் இந்த கூட்டுறவு சங்கம் தொடங்கப்பட்டது.

ஆனால் கடந்த மூன்று மாதங்களாக சங்கம் செயல்பவில்லை. கூட்டுறவு சங்கத்தின் தலைவர், இயக்குநர் பதவி இழந்து விட்டனர். சங்கம் செயல்படாதகாரணத்தால் இங்கு வேலை செய்து வந்த பல பெண்களுக்குச் சம்பளம் கொடுக்கப்படவில்லை.

இதனால் ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதியின் அ.தி.மு.க.எம்.எல்.ஏ. தாமரைக்கனியைச் சூழ்ந்து கொண்டு 200 க்கும் மேற்பட்ட பெண்கள் முற்றுகைப்போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள் தாமரைக்கனியிடம் மனுக் கொடுத்தனர். அவர் மனுவைப் பெற்றுக் கொண்டு இது குறித்து விரைவில்நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X