For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

காட்டிலிருந்து நாட்டுக்கு இடம்பெயர்ந்தார் மாறன்?

By Staff
Google Oneindia Tamil News

சேலம்:

வீரப்பன் பதுங்கியிருக்கும் சத்யமங்கலம் காட்டில் உள்ள மாறன் அங்கிருந்து வெளியேறி விட்டதாக தமிழர் விடுதலைப் படை தரப்புத் தகவல்கள் உறுதியாகத்தெரிவிக்கின்றன.

தமிழர் விடுதலைப்படை தலைவர் மாறனுக்கு தொழில்நுட்ப வேலைகள் மட்டுமே தெரியும். துப்பாக்கி சுடும் பயிற்சி மாறனுக்கு ஓரளவே தெரியும்.மாறனிடம் இருந்த திறமைவாய்ந்த சிலரை போலீஸார் ஏற்கனவே கைது செய்து விட்டதால் தனது படையில் திறமை வாய்ந்தவர்களை சேர்க்கவேமாறன் காட்டிலிருந்து வெளியேறிவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஆந்திராவைச் சேர்ந்த நக்சலைட்டுக்கள் தமிழகத்தில் ஊடுருவியுள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஆந்திராவில் இருந்து 3 நக்சலைட்டுக்கள் தற்போது தர்மபுரி மாவட்டத்தில் ஊடுருவி உள்ளனர். இவர்கள் சிதறிக்கிடக்கும் நக்சல் இயக்கத்தினரைசந்தித்துப் பேசி ஒன்று சேர்ப்பதற்காக ஊடுருவியுள்ளார்கள் என்று கருத்து நிலவுகிறது.

மேலும் இவர்கள் நக்சல் இயக்கத்தில் இளைஞர்களை சேர்க்கும் விதத்தில் கிராமங்களில் பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

குறிப்பாக தர்மபுரி மாவட்டம் அஞ்செட்டி, நாட்ராம்பாளையம், பென்னகரம், கம்பையநல்லூர், காரியமங்கலம், நாய்க்கன்கொட்டாய் சுற்றுப்பகுதிகிராமங்களிலும் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் என்றும் தெரிய வந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X