ரேடியோவின் மவுசு குறையவில்லை .. சுஷ்மா சுவராஜ்
திருச்சி:
டி.வி.யின் ஆதிக்கம் அதிகமாக இருந்தாலும் ரேடியோவின் முக்கியத்துவம் இன்னும் குறையவில்லை என்று மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர்சுஷ்மா சுவராஜ் தெரிவித்தார்.
திருச்சி அகில இந்திய வானொலி நிலையத்தில் விவித பாரதி அலை வரிசை பண்பலை ஒலிபரப்பு தொடக்கவிழா நடைபெற்றது.
விழாவுக்கு திருச்சி சிவா எம்.பி.தலைமை தாங்கினார். நிலைய முதல் நிலை என்ஜினியர் மோகன்தாஸ் வரவேற்றுப் பேசினார்.
ஒளிபரப்பைத் தொடங்கி வைத்து அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கூறியதாவது:
இன்று டி.வி.யின் ஆதிக்கம் அதிகம் இருந்தாலும் ரேடியோவின் முக்கியத்துவம் குறையவில்லை. கிராமப்புற மக்கள் பெரும்பாலும் ரேடியோவில்தான் நிகழ்ச்சிகளை கேட்டு மகிழ்கிறார்கள்.
ரேடியோ ஒளிபரப்பு நிகழ்ச்சிகள்தான் தான் அதிகமான மக்களைச் சென்றடைகிறது. இசைக்கும், ரேடியோவுக்கும் உள்ள உறவு வலுவானது. இங்கு 1கிலோவாட்டாக இருந்த பண்பலையின் அளவு 10 கிலோவாட்டாக மாறி இருக்கிறது என்றார் சுஷ்மா சுவராஜ்.












Click it and Unblock the Notifications