காதலைக் கண்டித்த நண்பனின் தலை "கட்

Subscribe to Oneindia Tamil

கோவை:

சித்தியின் மகளைக் காதலித்த நண்பனின் தலையை அறுத்து நடந்து சென்று போலீசில் சரணடைந்தார் திருப்பூர் வாலிபர்.

பெரியகுளத்தைச் சேர்ந்த ஆண்டன் எனபவரது மகன் நாகராஜன் (19). இவர் திருப்பூரில் தங்கி பனியன் கம்பெனி ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவரும் அணைக்காட்டுப் பகுதியைச் சேர்ந்த முருகேசனும் நண்பர்களாக ஒரே அறையில் தங்கியிருந்தனர்.

நாகராஜனின் சித்தி வீடு திருப்பூரில் உள்ளது. இங்கு நாகராஜன் அடிக்கடி சென்று வருவார். அப்போது முருகேசனையும் உடன்அழைத்துச் செல்வது வழக்கம். அப்போது நாகராஜனின் சித்தியின் மகளுக்கும் முருகேசனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தப்பழக்கம் காதலாக மாறியுள்ளது. இந்தக் காதல் குறித்து அறிந்த சித்தி, நாகராஜனின் பழக்கத்தையும், அவனுடைய நண்பனையும்கண்டித்துள்ளார். கடிந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த நாகராஜன், அறைக்குத் திரும்பினார்.

இரவு அங்கு முருகேசன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது அம்மிக்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டுகொலை செய்தார். பின்னர் கழுத்தை அறுத்து எடுத்துக் கொண்டு சாவகசமாக போலீஸ் ஸ்டேஷனுக்குச் சென்றார்.

திருப்பூர் வடக்குப் போலீசில் தலையை ஒப்படைத்தார். ஆனால் தெற்குப் போலீஸ் ஸ்டேஷனில் ஏற்க மறுத்து அவரை வடக்குப்போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சென்று சரணடைந்தார். இந்த சம்பவம் திருப்பூரில் பெரும் பரபரப்பைஏற்படுத்தியது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+