For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

கோலாலம்பூர் தீவிபத்தில் 5 தமிழர்கள் சாவு

By Staff
Google Oneindia Tamil News

கோலாலம்பூர்:

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில், ஏற்பட்ட தீவிபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் கருகி இறந்தனர்.இவர்கள் அனைவரும் தமிழர்கள்.

கோலாலம்பூரில் டாக்சி டிரைவராக வேலை பார்த்து வந்தவர் காளீஸ்வரன் (42). இவரது மனைவி தமிழ்ச் செல்வி(40). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். மலேசிய நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 4 மணியளவில்,இவர்கள் குடியிருந்த அபார்ட்மென்ட்டில் தீப் பிடித்தது. காளீஸ்வரன் குடியிருந்த வீடு 15-வது தளத்தில் இருந்தது.

தீப்பிடித்துக் கொண்டதும் காளீஸ்வரன் குடும்பத்தினர் தப்பிக்க வழியில்லாமல் துடித்தனர். இந்த நிலையில், தமிழ்ச்செல்வி, மூன்று மகள்களும் தீயில் கருகி இறந்தனர். காளீஸ்வரனும், மூத்த மகள் சுபத்ராவும் (18) மட்டும் உயிர்தப்ப போராடினர். இந்த நிலையில் பாத்ரூமில் இருந்த ஜன்னலை உடைத்த காளீஸ்வரன், அதன் வழியேசுபத்ராவை வெளியே தள்ளினார். ஆனால் அவரால் வெளியே வர முடியவில்லை. இறுதியில் அவரும்தீக்கிரையாகினார். சுபத்ரா மட்டும் உயிர் தப்பினார்.

பலத்த தீக்காயத்துடனும், உடல் முழுவதும் கண்ணாடித் துண்டுகள் குத்தியிருந்தும் கூட, தனது குடும்பத்தினரைக்காப்பாற்றக் கோரி சுபத்ரா கதறினார். அவரது உடலில் உள்ளாடை மட்டுமே மிஞ்சியிருந்தது.

சுபத்ராவின் குரலைக் கேட்ட பக்கத்து வீடுகளில் வசித்தவர்கள் ஓடிவந்துள்ளனர். வீட்டுக் கதவை உடைத்து உள்ளேசிக்கியிருந்தவர்களைக் காப்பாற்ற முயற்சித்தனர். ஆனால் அது தோல்வியில்தான் முடிந்தது.

தீயணைப்புப் படை வீரர்களுக்கத் தகவல் போய் அவர்கள் வந்து 1 மணி நேரத்திற்குப் பிறகே தீஅணைக்கப்பட்டது. சுபத்ரா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

தீவிபத்திற்கான காரணம் தெரியவில்லை.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X