எல்சால்வடார் பூகம்பத்தில் 381 பேர் சாவு
சான் சால்வடார் (எல் சால்வடார்):
மத்திய அமெரிக்க நாடான எல்சால்வடாரில் ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட பூகம்பத்தில்381 பேர் உயிரிழந்தனர். 779 பேர் காயமடைந்தனர். நூற்றுக்கணக்கானோரைக்காணவில்லை.
அதிபர் பிரான்சிஸ்கோ புளோரஸ் இதுகுறித்துக் கூறுகையில், சாவு எண்ணிக்கைஉயரும் என்று தெரிகிறது. பொருட் சேதம் குறித்துத் தெரியவில்லை. அதுகுறித்துமதிப்பிடப்பட்டு வருகிறது.
கொலம்பிய அரசிடம் 3000 சவப் பெட்டிகளை தந்து உதவுமாறு கோரியுள்ளோம்.இவை மூலம் காயமடைந்தவர்கள், இறந்தவர்களை வேறு இடத்திற்கு மாற்ற முடியும்என்றார்.
பூகம்பம் பாதித்த இடங்களிலிருந்து இதுவரை 1336 பேர் வேறு இடத்திற்குஅப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 1200 பேர் வரை காணாமல் போயுள்ளதாகதேசிய அவசரகால கமிட்டி கூறியுள்ளது.
சான்டா டெக்லா நகரில், பூகம்ப இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்த நூற்றுக்கணக்கானபேர் மீட்கப்பட்டுள்ளனர். இங்கு 500க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளன.












Click it and Unblock the Notifications