கோமாதா பூஜை செய்கிறார் ஜெயலலிதா
சென்னை:
தன் மேலிருக்கும் வழக்கு விவகாரங்களிலிருந்து விடுபடுவதற்காக சென்னைபார்த்தசாரதி கோவிலில் கோமாதா பூஜை நடத்த ஜெயலிதா திட்டமிட்டுள்ளதாககூறப்படுகிறது.
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா தன் மீது இருக்கும் வழக்குவிவகாரங்களிலிருந்து விடுபடவும், அரசியல் பிரச்னைகளில் தீர்வு காணவும் கோயில்கோயிலாக சென்று யாகங்கள், அபிஷேகங்கள் நடத்தி வருகிறார்.
ஆடி மாதம் முழுவதும் சென்னை சைதாப்பேட்டையிலிருக்கும் இளங்காளி அம்மன்கோயிலில் வெள்ளிக்கிழமை தோறும் சென்று வழிபாடு நடத்தினார் ஜெயலலிதா.
இரண்டு மாதங்களுக்கு முன் தனது தோழி சசிகலாவுடன் நவக்கிரக தலங்களுக்குசென்று வழிபாடு நடத்தினார் ஜெயலலிதா.
தற்போது ஜெயலலிதா சென்னை பார்த்தசாரதி கோயிலில் கோமாதா பூஜைநடத்தவிருப்பதாக கூறப்படுகிறது. கோமாதா பூஜைக்கான விவரங்கள் குறித்து அறியசசிகலா சென்னை பார்த்தசாரதி கோயில் சென்று வந்தார் எனத் தெரிகிறது.
கோயில் குருக்கள் கோமாத பூஜைக்கான வழிமுறைகள், பூஜை செய்ய சிறந்த நாட்கள்போன்ற விவரங்களை குறித்து கொடுத்துள்ளார். மேலும் கோமாதா பூஜை நடத்த இரவு11.30 மணி அல்லது அதிகாலை 3.00 மணி சிறந்தது எனவும் கூறியுள்ளதாகதெரியவந்துள்ளது.












Click it and Unblock the Notifications